Friday 14 September 2012

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க வரலாறு - 3

பகுதி:3
ங்கு ஒன்று 100 ரிங்கிட். முழுமையாகச் செலுத்த இயலாதவர்கள் மாதம் பத்து ரிங்கிட் செலுத்தி கூட்டுறவு சங்கத்தில் அங்கத்தினர் ஆகலாம். சாதாரணத் தோட்டத் தொழிலாளர்கள் பங்கு வாங்குவதற்கு இது எளிதாக இருந்தது. நாடு முழுவதும் அங்கத்தினர் சேர்த்து பங்குப் பணம் பெற்று துண்டாடல்களுக்குப் போகும் தோட்டங்களை வாங்குவதே கூட்டுறவு சங்கத்தின் முதல் குறிக்கோளாகும்.

 

19 பேர் கொண்ட குழுவுடன் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்ட இரண்டு வாரத்தில் 31.06.1960-இல் சங்கங்களின் பதிவிலாகாவில் பதிவு பெற்றவுடன் துன் வீ.தி.சம்பந்தன் அவர்களும் மற்றும் ம.இ.கா. தலைவர்களும் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு கூட்டுறவு சங்கத்திற்கு அங்கத்தினர்கள் சேர்க்கத் தொடங்கினர்.

புக்கிட் சீடிம் தோட்டத்தை பிரதமர் துங்கு திறந்து வைக்கிறார்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நாம் ஏழைதான். ஆனால், கோழைகள் இல்லை. மாதம் பத்து வெள்ளி கொடுத்து பங்கு வாங்குங்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்று துன் வீ.தி.சம்பந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பிரசாரம், நாட்டில் உள்ள இந்தியர்களிடையே, குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.


நாட்டில் உள்ள ம.இ.கா. கிளைகளும் சில தேசியத் தோட்டத் தொழிற் சங்கக் கிளைகளும் கொடுத்த ஒத்துழைப்பின் பேரிலும், சமுதாய உணர்வுள்ள சில தோட்டக் குமஸ்தாக்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் ஆர்வத்தினாலும் உறுப்பினர்கள் அதிகமாகச் சேர்ந்தனர். இதனால், கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்ட ஆறே மாதங்களில் கெடா மாநிலத்தில் உள்ள புக்கிட் சீடிம் தோட்டத்தை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.