Thursday 13 September 2012

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க வரலாறு - 2

 
பகுதி:2
லேசிய இந்தியர் காங்கிரசின் தலைவராகவும் பொதுப்பணி - தபால் - தந்தி அமைச்சராகவும் இருந்த துன் வீ.தி.சம்பந்தன் அவர்களும், ம.இ.காவின் தலைவர்களும் இப்பிரச்னையைச் சமாளிக்க பலரோடு கலந்து ஆலோசிக்கலாயினர். கூட்டுறவு சங்கம் ஒன்றை அமைத்து துண்டாடல்களுக்குப் போகும் தோட்டங்களை வாங்கி ஏழைத் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து வேலையும் இருப்பிடமும் வழங்க முயற்சிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.


1960-ஆம் ஆண்டு மே திங்கள் 14-ஆம் நாள் மாலை 7.30 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கூட்டுறவுக் கல்லூரியில் துன் வீ.தி. சம்பந்தன் அவர்கள் தலைமையில் கூட்டுறவு சங்க அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.


தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் லிமிடெட் என்ற பெயரில் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது. கூட்டுறவு சங்கத்திற்கு துன் வீ.தி. சம்பந்தன் அவர்கள் தலைவராகவும், ம.இ.காவின் துணைத் தலைவரும், தொழிலாளர் அமைச்சருமான டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள் துணைத் தலைவராகவும் அழைக்கப்பட்டனர்.

நெகாரா வங்கியில் இயக்குநராக இருந்த திரு.ஆர். கோவிந்தசாமி அவர்கள் இயக்குநர் வாரியத்தின் அக்ராசனராகவும், ம.இ.காவின் பொருளாளர் திரு.எஸ்.எஸ்.முருகேசு அவர்கள் இயக்குநர் வாரியத்தின் துணை அக்ராசனராகவும், கூட்டுறவு இலாகாவைச் சேர்ந்த திரு. எஸ்.டி.லிங்கம் அவர்கள் கௌரவச் செயலாளராகவும், திரு.வீ.ஜே.பாலசுந்தரம் அவர்கள் கௌரவப் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.


பேராக் மாநில ம.இ.கா. தலைவர் திரு.வீ.மீனாட்சிசுந்தரம், தோட்ட நிர்வாகி திரு.மாமன் ஜான், திரு.ஏ.பழனிச்சாமி, திரு.நைனா கவுண்டர், திரு.எஸ்.துர்கையா, திரு.கே.பணிக்கர், திரு.எஸ்.கைலாசம், மாண்புமிகு செனட்டர் டான்ஸ்ரீ ஆதி.நாகப்பன், செனட்டர் டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா, திரு.ஐ.குருதயாள்சிங், திரு.என்.இராமநாதன் ஆகியோர் வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். கணக்காய்வாளர்களாக திரு.பி.எல்.இட்சுமணனும், திரு.என்.எஸ்.மணியமும் நியமனம் செய்யப்பட்டனர்.


No comments:

Post a Comment